Wednesday, 29 December 2021

உழவில்லையேல் உணவில்லை!!!


أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ  أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ  لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا



நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றை பதற்களாய் ஆக்கிவிட்டிருப்போம்.       திருக்குர்ஆன்:- 56:63, 64, 65



டிசம்பர் 23 உலக விவசாயிகள் தினம்



விவசாயம் மனிதன் வாழ்வதற்கு மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்துக்கும் தேவையான ஒன்றாகும். எனவே, விவசாயத்தைத் தன் அருட்கொடைகளின் பட்டியலில் இறைவன் குறிப்பிடுவான்.



விவசாயத்தின் மூலம் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பலன்களைப் பெறுவதுடன் நீர் வளம், நில வளம் பெருகுவதற்கும் அது காரணமாக அமைந்துள்ளது. எனவே, விவசாயம் செய்பவர் பல்லுயிர்க்கும் உதவி செய்பவராக ஆகிவிடுகிறார்.



விவசாயத்தால் உடலுழைப்பும் மக்களுக்கு உபகாரம் செய்கின்ற உயர்ந்த பண்பும் ஏற்படுவதுடன், அல்லாஹ்வின் பரந்து விரிந்த கருணையையும், அவனுடைய அளப்பரிய ஆற்றலையும் அறிவையும் சிறிதளவு விளங்குகின்ற ஞானமும் கிடைக்கப் பெறுவதால், அது பொருளீட்டுவதற்கு சிறந்த வழியாக கூறப்பட்டுள்ளது. விவசாயமோ வியாபாரமோ எதுவாயினும் இஸ்லாமிய சட்டங்களைப் பேணிப் பொருளீட்டினால் அது உலகத்திற்கே நன்மை பயக்கக் கூடியதாக ஆகிவிடும்.



மக்காவைச் சுற்றி பல நகரங்கள் இருந்தபோதும் அல்லாஹ், அண்ணல் நபி (ஸல்) அவர்களை விவசாய பூமியாக விளங்கிய மதீனா நகருக்கே புலம்பெயர்ந்து செல்லுமாறு ஆணையிட்டான். காரணம், அண்ணலார் விவசாயத்தின் அவசியத்தை அறிந்து, அகிலத்தாருக்கும் அதனை அறிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான்.



மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதைக் கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி செய்கின்றோம். திருக்குர்ஆன்:- 50:9



நிலத்தை உழுது பண்படுத்தி, விதை விதைத்து, நாற்று நட்டு, நீர்பாய்ச்சி, களை எடுத்து வேளாண்மை வேலைகளை முறையாகவும் சரியாகவும் செய்வது தான் மனிதனின் வேலை. அதனை உற்பத்தி செய்து, வெளிப்படுத்தி, உணவுப் பொருட்களாக ஆக்கித் தருவது அல்லாஹ்வின் சக்தியிலும் அவன் நாட்டத்திலும் உள்ளது. வேளாண்மை செய்வதிலும் முழுமையான நம்பிக்கை அவன் மீதே இருக்க வேண்டும் என்பதை தான் மேற்காணும் திருவசனங்கள் தெளிவுபடுத்துகிறது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ ) முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதையை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2320, முஸ்லிம்-3164



முஸ்லிம் (3159) நூலின் மற்றொரு அறிவிப்பில் “அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு தர்மமாக அமையும்” என்று வருகிறது.



இறைத்தூதர்கள் பார்வையில்...



சல்மான் அல்பார்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (நான் ஒருவருக்கு அடிமையாய் இருந்தேன். அப்போது ஒருநாள்) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம் ( كَاتِبْ يَا سَلْمَانُ ) "சல்மானே! (அடிமைத்தளையிலிருந்து விடுபட) விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிக் கொள்" என்றார்கள். நான், என் எஜமானரிடம் 300 பேரீச்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை உயிர்ப்பித்து விளைவித்துத் தருகிறேன்; மேலும் நாற்பது ஊக்கியா (40×126.8=5360 கிராம்) தங்கமும் தருகிறேன்" எனக் கூறி விடுதலை பத்திரம் எழுதி வாங்கினேன். இதை அறிந்த அண்ணலார் தம் தோழர்களிடம், ( أَعِينُوا أَخَاكُمْ ) "உங்கள் சகோதரருக்கு உதவுங்கள்" என்று கூறினார்கள். தோழர்கள் அவரவர்கள் தங்கள் சக்தி தகுந்தாற்போல் பேரிச்ச மரக்கன்றுகள் கொடுத்து உதவினர். முடிவில் எனக்கு முன்னூறு மரக்கன்றுகள் சேர்ந்து விட்டன.



அப்போது அண்ணலார், ( اِذْهَبْ يَا سَلْمَانُ فَفَقِّرْ لَهَا فَإِذَا فَرَغْتَ فَائْتِنِي أَكُنْ أَنَا أَضَعُهَا بِيَدِي ) "சல்மானே! நீ சென்று அவற்றிற்கு குழித் தோண்டு. அவற்றைத் தோண்டி முடித்ததும் என்னிடம் வா. நான் அவற்றை எனது கரத்தால் நடுகிறேன்" என்று கூறினார்கள். நானும் மற்ற தோழர்களும் சேர்ந்து குழித்தோண்டி முடித்ததும் அண்ணலாரிடம் தெரிவித்தேன். பிறகு அண்ணலார் தமது திருக்கரத்தால் மரக்கன்றுகளை நட்டு முடித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவற்றில் ஒரு மரக்கன்றுகூட அழிந்து போகவில்லை. முன்னூறு மரக்கன்றையும் (நட்டு விளைத்து) என் எஜமானருக்கு நிறைவேற்றினேன். அதன்பிறகு அண்ணலார் என்னிடம் கோழி முட்டை அளவு போன்று (நாற்பது ஊக்கி) தங்கம் கொடுத்தார்கள். நான் அதைக்கொண்டு போய் என் எஜமானரிடம் கொடுத்து விடுதலைப் பெற்றேன். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா



நபி ஆதம் (அலை) என்ற முதல் மனிதரே ஒரு விவசாயிதான். அன்று தொடங்கிய விவசாயத் தொழில் இறுதி நாள் வரை தொடரும் என்பதில் ஐயமில்லை. அது அல்லாஹ்வின் அடிப்படை நியதி.



தொடக்கக் காலத்தில், முதல் நாள் பயிரிட்டால் மறுநாள் அறுவடை செய்யலாம் எனக் காலத்தைச் சுருக்கி வைத்திருந்தான் இறைவன். காலம் செல்லச் செல்ல காலம் விரிந்தது. மூன்று முதல் நான்கு மாதங்கள் அறுவடை செய்யக் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.



இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் நாட்டில் எதிர்வரும் வறுமையை சமாளிக்க தன்னை வேளாண்மைத்துறை அமைச்சராக நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள் என திருக்குர்ஆன் (12:55) இயம்புகிறது.




எகிப்து நாட்டில் யூசுஃப் (அலை) அவர்கள் வேளாண்மைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு, விவசாயத்தை முறையாக செய்து அதில் வரும் தானியங்களை முறையாக பாதுகாத்து எதிர் வந்த ஏழாண்டு கால கடும் பஞ்சத்தால் நிகழ்ந்த வறுமையை சமாளித்தார்கள் என்பதை திருக்குர்ஆனின் யூசுஃப் அத்தியாயம் விவரிக்கிறது.



இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் ஒருவருடைய ஆடுகள் மற்றொருவருடைய விவசாயத்தில் மேய்ந்து நாசமாக்கி விட்டது. இதைப்பற்றி அந்த விவசாயி சுலைமான் (அலை) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபியவர்கள், ஆடுகளுக்குரியவர் நாசமாகிவிட்ட விவசாயத்தை மீண்டும் பசுமையாக்கி தரவேண்டும். அதுவரை அந்த ஆடுகள் அந்த விவசாயியிடம் தான் இருக்கும்" என்று ஓர் அழகான தீர்ப்பு வழங்கியதைப்பற்றி திருக்குர்ஆன் (21: 78,79) இயம்புகிறது.



இந்நிகழ்வு, விவசாயம் செழித்தோங்க வேண்டும் என்பதில் சுலைமான் (அலை) அவர்களுக்கு இருந்த அக்கறையை எடுத்துரைக்கிறது.



ஆம்! நாட்டில் ஏற்படும் வறுமையைப் போக்க, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, விவசாயம் செழித்தோங்கி, அதன்மூலம் விளைந்த உணவுபொருட்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு, மக்களுக்கு முறையாக விநியோகிப்பட வேண்டும்.



விவசாயத்தில் புரட்சி



தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேரிச்ச மரங்கள் உள்ள தோட்டத்தில் கடந்து சென்ற அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். மரங்களின் மேலிருந்து விவசாயிகள் மகரந்தச்சேர்க்கை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது அண்ணலார், ( مَا يَصْنَعُ هَؤُلاَءِ ) "இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல்கொள்ளச் செய்கின்றனர்" என்று கூறினர். அப்போது அண்ணலார், ( مَا أَظُنُّ ذَاكَ يُغْنِي شَيْئًا ) "இதனால் பயனேதும் ஏற்படும் என நான் கருதவில்லை" என்று கூறினார்கள்.



அண்ணலார் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் ஒட்டு சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். மரங்களிலிருந்து இறங்கிவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு விளைச்சல் பாதிக்கப்பட்டது) இது குறித்து அண்ணலாருக்குச் செய்தி எட்டியது. அப்போது அண்ணலார், ( إِنَّمَا هُوَ ظَنٌّ إِنْ كَانَ يُغْنِي شَيْئًا فَاصْنَعُوهُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ وَإِنَّ الظَّنَّ يُخْطِئُ وَيُصِيبُ ) "அவ்வாறு செய்வதனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்து கொள்ளட்டும். ஏனெனில் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். யூகம் தவறாகவும் ஆகலாம்; சரியாகவும் ஆகலாம்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4711, இப்னுமாஜா-2461, முஸ்னது அஹ்மத்



இது மதீனாவாசிகள் செய்தது ஒரு விவசாய நடைமுறை. ஒரே இனத்தைச் சேர்ந்த இரு செடிகளின் தண்டுகளை, அல்லது இரு மரங்களின் கிளைகளைப் பக்கவாட்டில் சீவிவிட்டு, ஒன்றின்மேல் மற்றொன்று பொருந்தி வளரும்படிச் செய்து வீரிய இனத்தை உருவாக்குகல்  என்பதே மதீனாவாசிகள் கையாண்ட முறையாகும். இதை அரபியில் "தல்கீஹ்" அல்லது "தஃபீர்" என்பர். 



அல்லாஹ் நாடினால், இதைச் செய்யாமலேயே நல்ல விளைச்சல் தர முடியுமே என்று அண்ணலார் கருதியிருக்கலாம். விவசாயத் துறையில் அண்ணலாருக்கு முன் அனுபவம் இருந்ததில்லை. பின்னர் தோழர்கள் விளைச்சல் குறைந்ததைச் சுட்டிக்காட்டிய பின்னர் தமது கருத்தை மாற்றிக்கொண்டு, இதுவொன்றும் அல்லாஹ் சொன்ன உத்தரவன்று; என் சொந்தக் கருத்துதான் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள். நூல்:- தக்மிலா



விதைகள் விதைத்த பிறகு அதன்மூலம் பலன்பெற சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இது இறைவனின் நியதி. ஆனால் மனிதன் அவனது அவசரப் புத்தியால் குறுகிய நாட்களுக்குள் நிறைய பலன் பெற வேண்டும் என்றெண்ணி, விவசாயத்தில் புரட்சி செய்கிறோம் என்று சொல்லி கொண்டு மரபணு மாற்று விதைகளை கண்டுபிடித்தான். அதன் மூலம் அவனது நோக்கம் நிறைவேறுகிறது.



சிறிய அளவில் இருக்கும் காய்கறி மற்றும் பழங்களை பெரிய அளவில் விளைவிப்பதற்காகவும், அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காகவும் மரபணு மாற்று விதைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காலப்போக்கில் நிலம் பாழ்பட்டு, மலட்டுத்தன்மை அடைந்துவிடும் என்பதே உண்மை. மீண்டும் அந்த நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது சிரமமாகிவிடும்.



இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலவிதமான நோய்களுக்கு ஆட்படுவதற்கு, மரபணு மாற்று விதைகள் மூலம் விளைந்த உணவுபொருட்களை உண்ணுவதே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



நெல், கத்தரிக்காய், தக்காளி, கடுகு, வாழைப்பழம், பப்பாளிப்பழம் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் மரபணு மாற்று விதைகள் மூலம் விளைவிக்கப்பட்டு, அந்த உணவு பொருட்கள் சந்தையில் அமோகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை விவசாய வளர்ச்சி என்பதா? அல்லது விவசாய அழிவு என்பதா?



அனுமதி உண்டு



அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ ) எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" அளவுக்கு (அவற்றின் நன்மை) குறைந்து போய்விடும்; விவசாய பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2322, முஸ்லிம்-3211



இஸ்லாத்தில் நாய் வளர்ப்பது தடை செய்யப்பட்டதாகும். என்றாலும், விவசாயிகளின் பாதுகாப்பு நலன் கருதி விவசாயப் பண்ணைகளில் நாய் வளர்த்துக்கொள்ளலாம் என இஸ்லாம் இயம்புகிறது. அதாவது விவசாய விஷயத்தில் ஹராம், ஹலால் ஆகின்றது.



சொர்க்கத்திலும் தொடரலாம்



அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர், தம் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ( أَلَسْتَ فِيمَا شِئْتَ ) "நீ விரும்பிய (இன்பமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அவர், ( بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ ) “ஆம். (நான் விருப்பப்படியே இன்பமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்" என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.)



அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து விடும். அப்போது இறைவன், ( دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لاَ يُشْبِعُكَ شَيْءٌ ) "எடுத்துக் கொள் ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது" என்று கூறுவான். (அந்த சபையில் இருந்து இதைச் செவியுற்ற) ஒரு கிராமவாசி, "அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்க முடியும். அவர்கள் தான் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர்" என்று கூறினார். இதைக்கேட்ட அண்ணலார் சிரித்து விட்டார்கள். நூல்:- புகாரீ-2348



விவசாயம் என்பது இந்த உலகத்துடன் முடிந்துவிடக்கூடியதல்ல. விரும்பினால் சொர்க்கத்திலும் தொடரலாம் என விளங்குகிறது.



புன்செய், நன்செய் நிலங்களாக மாறின



கொடி படர்ந்த (தோட்டங்களையும்), கொடி படராத (தோட்டங்களையும்), பேரீச்ச மரங்களையும், பலதரப்பட்ட உணவு தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டு (சுவையில்) வேறுபட்ட ஆலிவ் மற்றும் மாதுளை மரங்களையும் அவனே உருவாக்கினான். அவை பலன் தரும் போது, அவற்றின் பலனை உண்டு (அனுபவித்துக்) கொள்ளுங்கள். அவற்றை அறுவடை செய்யும் நாளில் அவற்றுக்கான  உரிமையை (ஸகாத்தை) வழங்கி விடுங்கள். விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் நேசிப்பதில்லை. திருக்குர்ஆன்:-  6:42



கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ ) எவரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதைத் தாமே பயிரிடட்டும்; அல்லது அதை தம் முஸ்லிம் சகோதரர் எவருக்காவது (பிரதிபலன் எதிர்பார்க்காமல் இலவசமாகப் பயிர் செய்யக்) கொடுத்து விடட்டும். இவ்வாறு செய்ய அவர் மறுத்தால் தமது நிலத்தை அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2341, இப்னுமாஜா-2443



நிலம் வைத்திருப்பவர் அவர் அதில் பயிரிட வேண்டும். அல்லது மற்றச் சகோதரருக்கு அந்த நிலத்தை வழங்கி, அவர் பயிர் செய்து பிழைத்துக்கொள்ள வழி வகுக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் நிலத்தை வீணாகப் போட்டுவைக்கக் கூடாது. இரண்டில் ஒன்றைச் செய்ய மறுத்தால் அவரே வைத்துக்கொள்ளவும் என்று கூறியது, தானும் பலன் அடையாமல் பிறரையும் பலன் பெறவிடாமல் தடுத்து வைத்துக் கொள்வது மிகக் கெட்ட பண்பு என்று அவருக்கு எச்சரிக்கை செய்வதற்காகக் கூறப்பட்டதாகும்.



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لأَحَدٍ فَهْوَ أَحَقُّ ) "எவர் யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தை பயிரிடுகிறாரோ அதைச் சொந்தமாக்கிக் கொள்ள அவரே அதிக உரிமையுடையவர் ஆவார்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



"உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் இதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளித்தார்கள்" என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நூல் புகாரீ-2335



ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சி காலத்தில் ( مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهْيَ لَهُ ) "எவர் ஒரு புன்செய் (தரிசு) நிலத்தை (பயிரிட்டு) உயிராக்குகிறாரோ அது அவருக்கே சொந்தம்" என அறிவித்தார்கள். நூல் புகாரீ-2334



“அதே சமயம் விவசாயம் செய்யும் நோக்கத்தோடு நிலத்தைக் கையகப்படுத்தி மூன்றாண்டுகள் ஆன பின்பும் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை எனில், அரசு அந்நிலத்தை மறுபடியும் பெற்றுக்கொள்ளும்” என்றும் அறிவித்தார்கள். இவ்வறிப்பின் காரணமாகப் புன்செய் நிலங்கள் எல்லாம் வெகு விரைவில் பலனளிக்கும் நன்செய் நிலங்களாக மாறிவிட்டன. நூல்:- அல்ஃபாரூக்



நிலத்தை உயிர்ப்பித்தல் என்பது, அதில் விவசாயம் செய்வது அல்லது மரம் நடுவது அல்லது கட்டிடம் கட்டுவது என்பதாகும்.



இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள பல நபிமொழிகளின் கருத்து என்னவென்றால், ஒருவரிடம் சிறிதளவு விவசாய நிலம் இருந்தாலும் அதில் பயிர் செய்து தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.



குத்தகைக்கு விடுதல்



அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, "அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (மீதிப் பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்கு கொடுத்துவிட வேண்டும்)" என்னும் நிபந்தனையின் பேரில் கொடுத்தார்கள். நூல்:- புகாரீ-2331, முஸ்லிம்-3153



மரங்கள் உள்ள தோப்பு வைத்திருக்கும் ஒருவர், அதை தம்மால் பராமரிக்க முடியாத நிலையில் இருப்பார். வேறொருவர் தோட்ட வேலைகள் தெரிந்தவராகவும் அதற்கான வாய்ப்பு உள்ளவராகவும் இருப்பார்;  அதே நேரத்தில், தோப்பு அவருக்கு இருக்காது. இப்போது இவர்கள் இருவரும் இணைந்தால் இருவருக்கும் நன்மை.



இதனால் தோப்பின் உரிமையாளர் தோட்டவேலை தெரிந்த விவசாயிடம் தோப்பைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைப்பார். அவர் மரங்களுக்கு நீர் பாய்ச்சி, அவற்றைச் செப்பனிட்டுப் பராமரித்துப் பாதுகாப்பார். கிடைக்கும் பலனில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு வழங்கப்படும். இவ்வாறு தோப்பைக் குத்தகைக்கு விடுவதே அல்முசா(க்)காத் ஆகும். இதற்கு 'முஆமலா' என்ற பெயரும் உண்டு. இரு தரப்பின் நன்மையையும் அவசியத்தையும் கருதி இந்த முறையை மார்க்கம் அனுமதிக்கிறது என்பதே பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். நூல்:-  இர்ஷாதுரஸ் ஸாரீ, தக்மிலா



தவிர்க்க வேண்டும்



ஹுமைத் ப் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அனஸ் (ரலி) அவர்கள், ( أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ ) "அருமை நாயகம் (ஸல்) அவர்கள், மரத்திலுள்ள பேரீச்சங் கனிகள் பக்குவம் அடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் "பக்குவம் அடைதல் என்றால் என்ன?" என்று கேட்டோம். "அது சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அடைவதாகும்" என்று கூறிவிட்டு, ( أَرَأَيْتَكَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ ) "அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்து விட்டால், நீ எந்த அடிப்படையில் உன் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும் சொல்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-3167



விவசாயம் செய்வதிலும் அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) முறையைப் பேண வேண்டும். இக்காலத்தில் அனுமதிக்கப்படாத (ஹராமான) பல வழிமுறைகள் கலந்து செயல்படுத்தப்படுகின்றன. பெரும்பாலோர் அதனை கவனிப்பதே இல்லை. குத்தகை என்ற பெயரில் பிறரிடம் நிலத்தைக் கொடுத்துப் பயிரிடச் செல்வதில் பல தவறான முறைகள் பின்பற்றப்படுகின்றன. குத்தகைக்கு விடுவதில் எந்த முறை கூடும் எது கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.



மா மரம், தென்னை மரம், பலா மரம் போன்றவற்றை, அவற்றில் காய்கள் காய்ப்பதற்கு முன்னதாகவே மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு குத்தகைக்கு விடுவதும்; குளத்திற்குள் இருக்கும் மீன்களை ஏலம் விடுவதும் பிறரை ஏமாற்றுவது போன்றதாகும். பொருட்கள் கண்முன் இல்லாமல், அவற்றின் மதிப்பீடு தெரியாமல் கொடுக்கல் வாங்கல் செய்வதோ, ஏலம் விடுவதோ கூடாது. இதுவே மார்க்கத் தீர்ப்பாகும்.



அக்கரை வேண்டும்



நிச்சயமாக அல்லாஹ் கொட்டைகளையும் விதைகளையும் பிளக்கிறவன். திருக்குர்ஆன்:- 6:96



ஒரு மனிதர் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "எனக்கு சொந்தமான நிலங்கள் சிரியாவில் உள்ளன. அவ்வழியாகச் சென்ற உங்களுடைய படை அதனைச் சீரழித்து விட்டது” என்று முறையிட்டார். உடனடியாக அப்போதே உமர் (ரலி) அவர்கள், அம்மனிதருக்கு பத்தாயிரம் வெள்ளிக்காசுகள் பரிகாரமாக வழங்க ஆணையிட்டார்கள். நூல்:- கிதாபுல் கர்ராஜ் இமாம் அபூயூசுஃப்



ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு விவசாயத்தில் இருந்த அக்கரையை மேற்கண்ட நிகழ்வின் மூலம் அறியலாம்.



ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தங்களுடைய மாநில ஆளூநர்களுக்கு, ( اِتَّقُو اللّٰهَ بِالفَلَّاحِ ) "விவசாயிகள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்" என்று கடிதம் எழுதினார்கள்.



அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَلاَ يَغْرِسُ الْمُسْلِمُ غَرْسًا فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ وَلاَ دَابَّةٌ وَلاَ طَيْرٌ إِلاَّ كَانَ لَهُ صَدَقَةً إِلَى يَوْمِ الْقِيَامَةِ ) ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ஒரு கால்நடையோ அல்லது ஒரு பறவையோ உண்டால், மறுமை நாள்வரை அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்லிம்-3162



அபூதர்தா (ரலி) அவர்கள் தனது முதுமைப் பருவத்தில் ஒருமுறை மரக்கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த ஒருவர், "அபூதர்தா (ரலி) அவர்களே! இந்த மரக்கன்றுகள் பயன் தர இன்னும் இருபது ஆண்டுகள் ஆகுமே, இதனால் உங்களுக்கு என்ன பயன்?" என்று வினவினார். அப்போது அன்னார், இதன் மூலம் நான் பயன்பெறாவிட்டாலும் எனக்கு பின்னால் வருபவர்கள் பயன்பெறுவார்கள். அது என்னுடைய மண்ணறைக்கு தர்மமாக வந்து சேரும்" என்று பதிலளித்தார்கள்.



அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு நோய் நிவாரணியை மருத்துவர்கள் மூலம் வழங்குவது போல், அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு உணவுகளை விவசாயிகள் மூலமாக தான் வழங்குகிறான். எனவே, விவசாயிகள் அல்லாஹ்வின் உணவுத் தரகர்கள் என்றால் மிகையாகாது.



சம்பாத்தியத்தில் விவசாயமே மிகச் சிறந்ததாகும் என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.



இந்தியாவின் பிதா மகன் அண்ணல் காந்தி அவர்கள், "இந்தியாவின் முதுகெலும்பு அதன் கிராமங்கள் தான்" என்றார். அதாவது, கிராமங்களில் செய்யப்படும் விவசாயம் தான் இந்தியாவின் வாழ்வாதாரம் என்பதாகும். 



சிகரெட் இல்லாமல் நம்மால் வாழ முடியும். ஆனால், அதை தயாரிப்பவன் கோடிஸ்வரனாக இருக்கிறான். மது இல்லாமல் நம்மால் வாழ முடியும். ஆனால், அதை தயாரிப்பவன் கோடிஸ்வரனாக இருக்கிறான். சாப்பாடு இல்லாமல் நம்மால் வாழவே முடியாது. ஆனால், (இந்தியாவைப் பொறுத்தவரை) அதை தயாரிப்பவன் (விவசாயி) பிச்சைக்காரனாக இருக்கிறான்.



இந்திய விவசாயிகள் தம் வேளாண்மைப் பொருள்கள்மூலம் சம்பாதிக்கின்ற பணத்திற்கு வரி கட்டத் தேவையில்லை என்பது சட்டம். இருப்பினும் இந்திய விவசாயிகள் பலர் ஏன் ஏழ்மை நிலையிலேயே இருக்கிறார்கள்? ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?



பெரும்பாலான விவசாயிகள் வட்டிக்குக் கடன் வாங்கியே விவசாயம் செய்கிறார்கள். அவர்களுக்கு மகசூல் நல்லவிதமாகக் கிடைக்கின்றபோது வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்துகிறார்கள். அதேநேரத்தில் மழை பெய்யாமல் பயிர்கள் கருகிப் போனாலோ, இயற்கைச் சீற்றத்தால் அழிந்து போனாலோ, அந்த விவசாயி வாங்கிய கடன் தள்ளுபடி ஆகாது. அதைத் திரும்பச் செலுத்தித்தான் ஆகவேண்டும். மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டிருக்கும். இதனால்தான் விவசாயிகள் பலர் ஏழைகளாகவே உள்ளனர்; சிலர் தம்மை மாய்த்துக்கொள்கின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும்.



மேலும் இயற்கைச் சீற்றத்தால் பயிர்கள் அழிந்துவிட்டால், அப்போது வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும். இதுதான் இந்திய அரசு விவசாயிகளுக்குச் செய்ய வேண்டிய முதற்கடமையாகும். நாட்டு நலனில் அக்கறைகொண்ட ஆட்சியாளர்கள் இதைத்தான் முதலில் செய்வார்கள்.



விவசாயத்தையும், விவசாயியையும் கண்ணியப்படுத்தும் அரசால் மட்டும் தான் நாட்டை முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.



நமது நாட்டில் விவசாயிகளும் விவசாயமும் செழித்தோங்கி, அனைத்து மக்களும் பசியாற உண்டு, நிம்மதியாக வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்! 



மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

Friday, 14 December 2012

பொய் பேசுவதனால் ஏற்படும் தீங்குகள்

             


                  
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.

பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.

1) பொய் பேசுவது ஹராமானது ஆகும்!
அ) அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்: –
அல்லாஹ் கூறுகிறான்: -
“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)
ஆ) பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
முனாபிஃக்கின் அடையாளம் மூன்று
  1. பேசினால் பொய் பேசுவான்,
  2. வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்
  3. நம்பினால் மோசம் செய்வான்.
அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.

2) பொய்யின் வகைகள்: -
அ) அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது: -
இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும். சில மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -
‘அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -
“என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம்:புகாரி.
“என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.
ஆ) வியாபாரத்தில் பொய் கூறுவது: -
“மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று  நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் முஸ்லிம். 
“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (2079)
இ) கணவுகளில் பொய் கூறுவது: -
தாம் காணாத கணவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ‘தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…’ என்று வந்துள்ளது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘உருவப்படம் வரைகிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்பவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செவிதாழ்த்திக் கேட்கிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (உயிரினத்தின்) உருவப்படம் வரைகிறவர்…’ என்று இடம் பெற்றுள்ளது. ஆதாரம்,புகாரி:-7042
ஈ) கேட்பதையெல்லாம் பிறரிடம் கூறுவது: -
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.
இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில் வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினற்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறுகிறார்கள்.
நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உல்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உ) நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது: -
யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. 
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: -
“நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே” (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி.
அப்துல் ரஹ்மான் இப்னு அபி லைலா அறிவிக்கிறார்கள்: -
‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். அப்போது சிலர் அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளை கணாததினால்) அலறினார், அதைக் கண்ட மக்கள் சிரித்தனர். அப்போது நபி(ஸல்)அவர்கள் நீங்கள் எதைகண்டு சிரிக்கிறிர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் “ஒன்றுமில்லை நாங்கள் அம்புகளை எடுத்தோம், அதனால் அவர் அலறுகிறார். என்று கூறினர் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுருத்துவது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத், அஹ்மத்)
அப்துல்லா இப்னு அல் சயீப் இப்னு யஜீத், தன் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:-
“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ. அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது’ யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் (கூட) அதை அவரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத் மற்றும் திர்மிதி.
ஊ) குழந்தைகளிடம் பொய் சொல்வது: -
இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை/தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா’ நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

“யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிலப்படும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு
எ) மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது: -
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)

3) பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்: -
உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற் குரியவர்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது. பொய் பேசுபவர்களுக்குரிய இவ்வுலக மறுவுலக தண்டனைகளைப் பார்போம்.
அ) பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக் தனம்) விதைக்கப்படும்: -
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
“முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.  
அவர்களில் சிலர், ‘அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.  (அல்-குர்ஆன் 9:77)
ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.
ஆ) பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச்செல்லும்: -
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!
மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
இ) பொய் பேசுபவனுடைய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: -
இப்னு அல் கைய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -
(ஒருவருடைய) சாட்சியங்ககளும்,பத்வாக்களும்,குறிப்புகளும், நிராகரிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணம் பொய் பேசுவதாகும் ஏனென்றால், இந்த பொய் அவருடைய சாட்சியத்தையும், பத்வாக்களையும் மற்றும் குறிப்புகளையும் மாசுபடுத்துகிறது. இது ஒரு குருடன் நான் பிறையைப் பார்தேன் என்று சாட்சியம் கூறுவதைப் போன்றது. அல்லது ஒரு செவிடன் ஒருவர் நடந்து சென்ற ஒசையைக் கேட்டேன், என்று சாட்சியம் கூறுவது போன்றதாகும். பொய் பேசும் நாக்கானது வேலையே செய்யாத உறுப்பைப் போன்றது. உண்மையில் அது அதைவிட மோசமானது, ஒருவனிடம் இருக்கும் மிகமிக மோசமான ஒரு பொருள் எது வென்றால் அது பொய் பேசும் அவனுடைய நாக்கு ஆகும். ஆதாரம்:(அலாம் அல்-முவக்கியீன் 1/95)
ஈ) பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
39:60 அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்¢ பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)
உ) பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்: -
சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.
….
நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
ஊ) பொய் பேசினால் உண்மையான ஈமான் (நம்பிக்கை) ஏற்படாது: -
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது.  ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா.
4) அனுமதிக்கப்பட்ட பொய்கள்: -
1) அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்
1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: -
மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)
  1. ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது
  2. யுத்தத்தின் போது
  3.  மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு) 

Saturday, 12 November 2011

புகைப் பழக்கம் !

அஸ்ஸலாமு அலைக்கும்!
 
    நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள். 
    சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் þல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் þருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் þவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு 'சமூக விரோதி' புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.
    þறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?
    þஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல  நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.
    நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக þருக்கின்றான்.(அல்குர்ஆன் 4:29)
    þன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள்.  (அல்குர்ஆன் 2:195)
    உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்.(அல்குர்ஆன் 7:31)
    மேலே கண்ட þறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?
     மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக þருப்பது þஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.
    புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது "புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே" என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட þதையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல.

மூளை சுறுசுறுப்படைய வேண்டுமா....கனவு காணுங்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும்!

   ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்தளவிற்கு மனிதர்களுக்கு தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது. மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது. எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.

ஒரு நாளைக்கு 4 காஃபி
காலையில் எழுந்த உடன் ஆற அமர ருசித்து காஃபி குடியுங்கள். ஏனெனில் காஃபியில் உள்ள கெஃபீன் என்னும் வேதிப்பொருள், மூளையை பாதுகாக்கிறது. நாளொன்றுக்கு நான்கு கப் காஃபி குடித்தால் அல்ஷெய்மர்ஸ் என்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய் வராமல் தடுக்கப்படுகிறதாம். இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன் லேர்ந்து கிடைக்கிறதா ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் என்னும் வேதிப்பொருள்லேர்ந்து கிடைக்கிறதா என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மூளையைத் தூண்டுங்கள்
எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவும் உங்க முதுமைக் காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்!. ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம். குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை பெரிதாக மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!.

மன உளைச்சலை குறைங்க
மன உளைச்சலினால் நினைவாற்றல் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் மற்றும் இன்னும் சில பகுதிகளில் விஷத்தன்மையுள்ள பல ரசாயனப் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நினைவாற்றல் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு

கனவு காணுங்கள்!
கனவு காண்பதால் மூளை வளர்ச்சியடையும் என்ற அதிசயிக்கத்தக்க உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கண்களை திறந்து கொண்டே பகல் கனவு காண்பதால் எந்த பிரயோசனமும் இல்லை. சரியான நேரத்தை ஒதுக்கி, உறங்கும்போது, வரும் கனவுகள் ஒருவரின் நினைவாற்றல் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்கிறதாம். ஆனால் சரியான தூக்கமின்மையால் நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்கும் திறன் குறைந்து போகிறதாம். முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!

சுறுசுறுப்பான செயல்பாடு
நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்யவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது மூளை ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறதாம். நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவாக இருந்தாலும் அரைமணி நேரம் தொடர்ந்து செய்தால் மூளை வளர்ச்சி அதிகரிக்குமாம்.

நோயின்றி வாழ்வோம்
வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொதிப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்! உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்கும் திறனையும், நினைவுத்திறனையும் பெரிதும் பாதிக்கின்றனவாம். எனவே உடலை பேணுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

உணவுக் கட்டுப்பாடு

அதிகமாக உண்ணுவதன் மூலம் மூளை சோர்வடைந்து நினைவாற்றல் பாதிக்கிறதாம். அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகவும் குறைவாக உட்கொண்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். எனவே அதிக நார்ச்சத்துள்ள மிதமான அளவில் கொழுப்பும் புரதமும் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் செரிமானச் செயல்பாடானது சீராக நடைபெற்று உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்டகாலம் பாதுகாத்து சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

மீன் சாப்பிடுங்க
மூளைவளர்ச்சியை அதிகரிப்பதில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பிற்கு முக்கிய பங்குண்டு. இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த விதைகளையும் அதிகம் உண்ணலாம். மீன் எண்ணெய் மாத்திரைகள் தேவையில்லை.

மாத்திரைகளை தவிருங்கள்
வைட்டமின், தாது மாத்திரைகள் அப்புறம் சில நினைவாற்றல் மாத்திரைகள் எல்லாம் மூளைவளர்ச்சியை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல் போன்ற நோய்களும் தோன்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Monday, 31 October 2011

உணவு உண்பதற்கு முன்...!

அஸ்ஸலாமு அலைக்கும்!

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

‘உங்களில் ஒருவர் உணவு உண்ண முற்பட்டால் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறட்டும். அவ்வாறு கூற மறந்துவிட்டால் ‘பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆஹிரஹு’ என்று சொல்லட்டும்.

(ஆதாரம் : புகாரி)

நபியவர்கள் சொன்னதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

‘ஒருவர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உட்கொள்ளும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் சைத்தான் (அடுத்த சைத்தான்களை விழித்து) உங்களுக்கு இரவு தூங்குவதற்கு இடமோ உண்ணுவதற்கு உணவோ (இன்று) இல்லையெனக் கூறுவான்.



அந்த மனிதன் வீட்டினுள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூரவில்லையாயின் சைத்தான் ‘உங்களுக்கு இரவு தூகுவதற்கு இடம் கிடைத்துவிட்டது’ என்பான் உணவு அருந்தும் போதும் அந்த மனிதன் அல்லாஹ்வை நினைவுபடுத்தவில்லையாயின், சைத்தான் ‘உங்களுக்கு இரவு தூங்க இடமும், இரவுச் சாப்பாடும் (இரண்டும்) கிடைத்து விட்டன’ என்பான்.

(ஆதாரம் : முஸ்லிம்)

உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் போது ‘பிஸ்மில்’ சொல்வது மிக முக்கியமானதொரு ஸ¤ன்னா என்பது இமாம்களின் ஏகோபித்த முடிவாகும். இவ்வாறு பிஸ்மில் சொல்லாதவர் தனது உணவில் சைத்தானையும் சேர்த்துக் கொள்கிறார் என்று நபியவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இப்னு உமர் (றழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வருமாறு அறிவிக்கிறார்கள் :

உங்களில் ஒருவர் தனது இடது கையால் சாப்பிடக் கூடாது. இடது கையால் குடிக்கவும் கூடாது. உண்மையில் சைத்தான் இடதால் சாப்பிடுகிறான், இடதால் குடிக்கிறான்.’

(ஆதாரம் : முஸ்லிம்)

அபூ ஸல்மா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; ‘நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை நபியவர்களின் மடியில் அமர்ந்திருந்தேன். எனது கை உணவு தட்டில் அங்குமிங்குமாக சென்றது. இதை கண்ட நபியவர்கள் சிறுவனே பிஸ்மில் சொல் வலது கையால் சாப்பிடு உனக்கு அருகே இருக்கும் உணவைச் சாப்பிடு என்றார்கள்.

Wednesday, 12 October 2011

حديث

அஸ்ஸலாமு அலைக்கும்!

التآلف مع الإخوان

وقال النبي صلى الله عليه وعلى آله وسلم المؤمن ألف مألوف ولا خير فيمن لا يألف ولا يؤلف